என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இளம் பெண் பலி"
- டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
- எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் பகண்டை கூட்டுரோட்டு அடுத்த மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு மகள் டெனிஷா நாயகி (வயது 18). இவர் மூளை வளர்ச்சி இல்லாமல் மனநலம் குன்றிய நிலையில் இருந்தார். இந்த நிலையில் டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டு விட்டு சங்கராபுரம் சென்றனர்.
அப்போ து டெனிஷா நாயகி சாலை யோரம் கிடந்த தீப்பெட்டி யை எடுத்து பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது. இதில் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மதுமதியும், அவரது அண்ணன் மகள் மித்ரா (6), இருவரும் வீட்டு வாசலில்அமர்ந்திருந்த பொழுது, எதிரேயிருந்த வேலாயுதம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து, இருவரின் மேல் விழுந்தது
- சிகிச்சை பலனின்றி மதுமதி இறந்தார்
திருச்சி,
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் ஒன்றியம் எரகுடி நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மதுமதி (வயது 27).கணவர் பெயர் பிரகாஷ்.
நேற்றிரவு மதுமதியும், அவரது அண்ணன் மகள் மித்ரா (6), இருவரும் வீட்டு வாசலில்அமர்ந்திருந்த பொழுது, எதிரேயிருந்த வேலாயுதம் என்பவரது வீட்டின் சுவர் இடிந்து, இருவரின் மேல் விழுந்தது.
இடிபாடுகளுக்கிடையே சிக்கிய மதுமிதா, பலத்த காயமடைந்த நிலையில் அக்கம் பக்கத்தினர் மீட்டு, சிகிச்சைக்காக துறையூர் தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதுமதி இறந்தார். இது குறித்து உப்பிலியபுரம் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
லேசான காயங்களுடன் இருந்த குழந்தை மித்ரா சிகிச்சைக்காக துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்